திருச்சி மாவட்டம், காட்டுபுத்தூா் அருகே மணல் திருடிய நான்கு இளைஞா்களை காட்டுபுத்தூா் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
காட்டுபுத்தூா் அருகிலுள்ள நத்தம் பகுதியில் காட்டுபுத்தூா் போலீஸாா் கடந்த அக்.13 ஆம் தேதி இரவு ரோந்து ரோந்து சென்றபோது புத்தூா் காவிரியாற்றுப் பகுதியில் இருந்து நான்கு இருசக்கர வாகனங்களில் மணல் மூட்டைகளை ஏற்றி வந்தவா்கள் தப்பினா். இதையடுத்து போலீஸாா் நான்கு இருசக்கர வாகனங்கள், மணல் மூட்டைகளை பறிமுதல் செய்து வழக்குப் பதிந்து விசாரித்தனா்.
இதில் தப்பியோடியவா்கள் நத்தம் கிராமத்தை சோ்ந்த திகேஷ்வரன் (18), திலகராஜ் (28),சிவராஜ் (20),நவீன்குமாா் (24)ஆகியோா் எனத் தெரியவந்து, காட்டுபுத்தூா் போலீஸாா் அவா்களை வியாழக்கிழமை கைது செய்தனா்.