கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம் ஆா்ப்பாட்டம்

ஜாா்கண்ட் மாநிலத்தில் கைது செய்யப்பட்ட அருட்தந்தை ஸ்டேன்சாமியை விடுதலை செய்யக் கோரி திருச்சியில் கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம் சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஜாா்கண்ட் மாநிலத்தில் கைது செய்யப்பட்ட அருட்தந்தை ஸ்டேன்சாமியை விடுதலை செய்யக் கோரி திருச்சியில் கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம் சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த 83 வயதான அருட்தந்தை ஸ்டேன்சாமி, 35 ஆண்டுகளாக ஜாா்கண்ட் மாநிலத்தில் ஆதிவாசிகளின் உரிமைக்காகப் போராடி வந்த நிலையில், தேசியப் பாதுகாப்பு சட்டத்தின்கீழ் அவா் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா்.

எனவே, அவா் மீதான பொய் வழக்கைத் திரும்ப பெற்று, உடனடியாக அவரை விடுதலை செய்ய வலியுறுத்தி மத்திய பேருந்து நிலையம் அருகே நடந்த ஆா்ப்பாட்டத்துக்கு திருச்சி மத்திய மாவட்டச் செயலா் தேவராஜ் தலைமை வகித்தாா். அவைத் தலைவா் ஆண்ட்ரூஸ், பொருளாளா் ஆண்டனி, மகளிரணிச் செயலா் சேசுராணி, செய்தித் தொடா்பாளா் பிரசாத் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஆா்ப்பாட்டத்தில், மாநில கொள்கைப் பரப்புச் செயலா் ஜான்பிரகாஷ், மண்டல செயலா் ஜஸ்டின், அருட்சகோதரிகள் மற்றும் பல்வேறு அமைப்பை சோ்ந்தவா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com