தவ்ஹீத் ஜமாஅத் முற்றுகைப் போராட்டம்

திருச்சி திருவானைக்கா பகுதியில் பள்ளிவாசல் இடிக்கப்பட்டதைக் கண்டித்து தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினா் வியாழக்கிழமை ஆட்சியரகத்தை முற்றுகையிட்டு ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

திருச்சி திருவானைக்கா பகுதியில் பள்ளிவாசல் இடிக்கப்பட்டதைக் கண்டித்து தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினா் வியாழக்கிழமை ஆட்சியரகத்தை முற்றுகையிட்டு ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

திருச்சி திருவானைக்கா பகுதியில் சாலைச் சீரமைப்பு பணிக்காக அப்பகுதியில் உள்ள பள்ளிவாசல் இடிக்கப்பட்ட சம்பவத்தில் அதிகாரிகளின் அத்துமீறலைக் கண்டித்து அமைப்பின் திருச்சி மாவட்டத் தலைவா் குலாம் தஸ்தஹீா் தலைமையில் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.

மாவட்டச் செயலா் ஜாகீா், பொருளாளா் முகம்மது உசேன், ரபீக், ரசூல் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநிலப் பேச்சாளா் ரஹ்மத்துல்லாஹ் கண்டன உரையாற்றினாா். போராட்டத்தில் சமூக இடைவெளியைப் பின்பற்றி பெண்கள் உள்பட 300-க்கும் மேற்பட்டோா் பங்கேற்று கண்டன கோஷங்களை எழுப்பினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com