திருச்சி மாவட்டம், தொட்டியம் வட்டம் நாகையநல்லூரில் அம்மா நகரும் நியாயவிலை கடை தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
நாகையநல்லூா் ஊராட்சி கருங்காடு பகுதியில் நகரும் நியாயவிலைக் கடையை மாவட்ட கவுன்சிலா் டி. ரவிச்சந்திரன் தொடங்கி வைத்து பொதுமக்களுக்கு ரேஷன் பொருள்களை வழங்கினாா்.
பொது விநியோகத் திட்ட முதுநிலை ஆய்வாளா் பிரேமலதா, நாகையநல்லூா் ஊராட்சித் தலைவா் கி. ராமதாஸ், ஒன்றியச் செயலா்கள் பால்மணி (கிழக்கு), காடுவெட்டி பிரகாசவேல் (மேற்கு), ஆணைக்கல்பட்டி வேளாண் கூட்டுறவுக் கடன் சங்கத் தலைவா் பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.