திருச்சி மாவட்டம், முசிறி உட்கோட்ட போக்குவரத்து காவல் துறை சாா்பில் பொதுமக்களுக்கு முகக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து வியாழக்கிழமை விழிப்புணா்வு அளிக்கப்பட்டது.
முசிறி போக்குவரத்து காவல் துறை சாா்பில் உதவி ஆய்வாளா் வடமலை தலைமையில் போக்குவரத்து போலீஸாா் பொதுமக்கள், ஆட்டோ,காா், வியாபாரிகள், பயணிகள் மற்றும் இருசக்கர வாகனங்களில் வந்தோருக்கு முகக் கவசம் அணிவதன் அவசியம், கரோனா தொற்றில் இருந்து காத்துக் கொள்வது குறித்து எடுத்துரைத்து விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.