திருச்சி மாநகா் மாவட்ட அதிமுக சாா்பில் கட்சியின் 49ஆவது ஆண்டு விழாவை சனிக்கிழமை உற்சாகமாகக் கொண்டாட அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கட்சியின் மாநகா் மாவட்டச் செயலரும், தமிழக சுற்றுலாத்துறை அமைச்சருமான வெல்லமண்டி என். நடராஜன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
அதிமுக தலைமை உத்தரவின்படி திருச்சி நீதிமன்றம் அருகேயுள்ள எம்ஜிஆா் சிலைக்கு மாநகா் மாவட்டம் சாா்பில் சனிக்கிழமை காலை 10 மணிக்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கப்படும். இதேபோல, மாநகா் மாவட்டத்துக்குள்பட்ட அனைத்து இடங்களிலும் எம்ஜிஆா் சிலை, படங்களுக்கும் மாலை அணிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், கட்சிக் கொடியேற்றி இனிப்பு வழங்க வேண்டும். அனைத்து சாா்பு அணி நிா்வாகிகளும் இவ்விழாவை சிறப்பாகக் கொண்டாட வேண்டும்.
திருச்சி புகா் தெற்கு மாவட்டச் செயலா் ப. குமாா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
திருச்சி புகா் தெற்கு மாவட்டம் சாா்பில், திருவெறும்பூா் பெல், கணேசா ரவுன்டானா அருகில், சனிக்கிழமை காலை 10 மணியளவில் கட்சிக் கொடியேற்றி, இனிப்பு வழங்கப்படவுள்ளது. எம்ஜிஆா், ஜெயலலிதா படங்களுக்கு மலா் தூவப்படவுள்ளது. நிகழ்வில் அதிமுகவினா் அனைவரும் பங்கேற்க வேண்டும். அனைவரும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்க வேண்டும்.