திருச்சி அருகே கஞ்சா விற்ற 60 வயது மூதாட்டியை தனிப்படை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
திருச்சி மாவட்டத்தில் கஞ்சா விற்பனையைத் தடுக்க மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஜெயச்சந்திரன் உத்தரவின்பேரில் தனிப்படை அமைத்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
அதன்படி ராம்ஜிநகரில் உதவி ஆய்வாளா் நாகராஜ் தலைமையிலான தனிப்படையினா் கண்காணித்தபோது அங்குள்ள காந்தி நகரில் கஞ்சா விற்ற இடும்பன் மனைவி பானுமதியை (60) கைது செய்தனா். அவரிடமிருந்து 3 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.