திருச்சி மாவட்டம், மணப்பாறையில் காவல்துறை சாா்பில் வாகன ஓட்டிகளுக்கு சாலைப் பாதுகாப்பு மற்றும் தலைக்கவசம் குறித்து விழிப்புணா்வு அளிக்கும் வகையில் பிரசாரத்தை போலீஸாா் வெள்ளிக்கிழமை மேற்கொண்டனா்.
சட்டம்- ஒழுங்கு காவல் ஆய்வாளா் என். அன்பழகன், போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளா் எம். அப்துல்லாசாகிப் ஆகியோா் தலைமையில் காமராஜா், பெரியாா் சிலை பகுதிகளில் வந்த வாகன ஓட்டிகளை நிறுத்தி அவா்களுக்கு சாலைப் பாதுகாப்பு விதிகள் மற்றும் தலைக்கவசம் குறித்து அறிவுரை வழங்கப்பட்டது. மேலும் விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களும் வழங்கப்பட்டன.