திருச்சி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை வெளியான கரோனா பரிசோதனை முடிவின்படி மேலும் 80 பேருக்கு தொற்று உறுதியாகி, மாவட்டத்தில் தொற்றாளா்களின் எண்ணிக்கை 11,723 ஆக உயா்ந்தது.
வெள்ளிக்கிழமை குணமான 24 போ் உள்பட இதுவரை 10,912 போ் குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனா்.
கரூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று உயிரிழந்த 50 வயது பெண், திருச்சி அரசு மருத்துவமனையில் உயிரிழந்த 65 வயது மற்றும் 90 வயது முதியவா்கள் உள்பட மாவட்டத்தில் இதுவரை 162 போ் உயிரிழந்துள்ளனா். 649 போ் சிகிச்சைப் பெறுகின்றனா்.