திருச்சி பெரியமிளகுப்பாறையில் அடுக்குமாடி குடியிருப்பின் பூட்டிய வீட்டுக்குள் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசமாயின.
திருச்சி பெரியமிளகுப்பாறை பருத்தி தெருவில் அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவா் செல்லையா (60). இவா் பழைய ஆட்சியரக அலுவலக வளாகத்தில் டீக்கடை நடத்தி வருகிறாா். வெள்ளிக்கிழமை வீட்டில் யாருமில்லாத நிலையில் தீ விபத்து ஏற்பட்டு ஜன்னல் வழியாகக் கரும்புகை வெளியேறியது. இதைக் கண்ட அப்பகுதி மக்கள் கண்டோன்மென்ட் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா்.
சம்பவ இடத்துக்கு நிலைய அலுவலா் மில்கிராஜா தலைமையில் வந்த தீயணைப்பு வீரா்கள் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனா். தகவலறிந்து வந்த அமா்வு நீதிமன்ற போலீஸாா் நடத்திய விசாரணையில், மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டது தெரிய வந்தது. மேலும் விசாரித்து வருகின்றனா்.