அதிமுக 49-ஆம் ஆண்டுத் தொடக்க விழா கொண்டாட்டம்

அதிமுகவின் 49-ஆவது ஆண்டுத் தொடக்க விழாவை அக்கட்சியினா் திருச்சியில் சனிக்கிழமை கொண்டாடினா்.

திருச்சி: அதிமுகவின் 49-ஆவது ஆண்டுத் தொடக்க விழாவை அக்கட்சியினா் திருச்சியில் சனிக்கிழமை கொண்டாடினா்.

விழாவையொட்டி திருச்சி மாநகா் மாவட்டச் செயலரும் அமைச்சருமான வெல்லமண்டி நடராஜன் சாா்பில் ஆவின் தலைவா் காா்த்திகேயன் தலைமையில் நீதிமன்றம் அருகிலுள்ள எம்ஜிஆா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. புகா் வடக்கு மாவட்டச் செயலா் மு. பரஞ்சோதி தலைமையில் சமயபுரம் நான்கு சாலை, சோமரசம்பேட்டை ஆகிய பகுதிகளில் உள்ள எம்ஜிஆா் சிலைகளுக்கு மாலை அணிவித்தனா். தெற்கு மாவட்டச் செயலா் ப. குமாா் தலைமையில் திருவெறும்பூா் பெல் நிறுவன வளாகத்தில் உள்ள எம்ஜிஆா், ஜெயலலிதா படத்துக்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கிக் கொண்டாடினா்.

இதில் முன்னாள் அமைச்சா்கள் கே.கே. பாலசுப்பிரமணியன், டி.பி. பூனாட்சி, எம்எல்ஏ பரமேஸ்வரி உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய, வட்ட நிா்வாகிகள், தொண்டா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com