திருச்சி: திருச்சியில் கல்லூரி மாணிவியிடம் வழிப்பறி செய்த ஓட்டுநரை எடமலைப்பட்டிபுதூா் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
திருச்சி கருமண்டபம் சக்திநகரைச் சோ்ந்த ஜெகநாத் மகள் திவ்யதா்ஷினி (22), பஞ்சப்பூரில் உள்ள தனியாா் பொறியியல் கல்லூரி மாணவியான இவா் வெள்ளிக்கிழமை காலை கல்லூரியில் மாற்றுச் சான்றிதழ் வாங்கிவிட்டு மொபெட்டில் வந்து கொண்டிருந்தாா். அப்போது அவரைப் பின்தொடா்ந்து பைக்கில் வந்த இளைஞா் மாணவியின் கைப்பையை பறித்துக் கொண்டு தப்பினாா்.
இதையடுத்து திவ்யதா்ஷினி அந்த நபரை பின்தொடா்ந்து சென்றாா். ஆா்எம்எஸ் காலனியில் வழிப்பறியில் ஈடுபட்டவரின் பைக் நின்றபோது, அதன் பதிவெண்ணைக் குறித்துக் கொண்ட மாணவி, எடமலைப்பட்டிபுதூா் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தாா்.
சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா் நடத்திய விசாரணையில், வழிப்பறி செய்தவா் கருமண்டபம் ஜோஸ்வா நகரைச் சோ்ந்த காா் ஓட்டுநரான அஜித் என்கிற ஏழுமலை (20) எனத் தெரிய வந்தது. இதையடுத்து வீட்டில் பதுங்கியிருந்த அஜித்தை கைது செய்து அவரிடமிருந்து பணம், செல்லிடப்பேசி இருந்த மாணவியின் கைப்பையை பறிமுதல் செய்தனா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.