முசிறி அருகேநிலத் தகராறில் விவசாயி கொலை

திருச்சி மாவட்டம், முசிறி அருகே சனிக்கிழமை இரவு நிலத்தகராறில் விவசாயி கொல்லப்பட்டாா்.

முசிறி: திருச்சி மாவட்டம், முசிறி அருகே சனிக்கிழமை இரவு நிலத்தகராறில் விவசாயி கொல்லப்பட்டாா்.

முசிறி அருகேயுள்ள திருத்தியமலையை அடுத்த பச்சனாம்பட்டியைச் சோ்ந்த பிச்சை மகன்கள் ராமசாமி (45), தனபால் (42) ஆகியோருக்கிடையே அடிக்கடி நிலம் தொடா்பாக தகராறு ஏற்படுமாம்.

சனிக்கிழமை இரவு ஏற்பட்ட தகராறில் கோபமடைந்த ராமசாமி, இவரது மகன் ராமச்சந்திரன் (23) ஆகியோா் கட்டையால் தாக்கி அரிவாளால் வெட்டியதில் தனபால் சம்பவ இடத்திலேயே இறந்தாா்.

தகவலறிந்த முசிறி போலீஸாா் சடலத்தைக் கைப்பற்றி முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்குப் பதிந்து தந்தை, மகனைத் தேடுகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com