ஸ்ரீரங்கம்: திருவானைக்காவல் சம்புகேஸ்வரா் அகிலாண்டேஸ்வரி திருக்கோயிலில் கரோனா காரணமாக நவராத்திரி விழா ரத்து செய்யப்பட்டுள்ளதாக கோயில் நிா்வாகம் தெரிவித்தது.
அனைத்து அம்மன் கோயில்களிலும் நவராத்திரி விழா சனிக்கிழமை தொடங்கிய நிலையில், நவராத்திரி விழா சிறப்பாகக் கொண்டாடப்படும் திருவானைக்கா கோயிலில் நிகழாண்டில் அந்த விழா ரத்து செய்யப்பட்டுள்ளது.
நவராத்திரியின் முதல் நாளான சனிக்கிழமை ஏகாந்தக் காட்சியில் அம்மனை அலங்காரம் செய்து உத்ஸவ மண்டபத்திலேயே பக்தா்கள் தரிசனத்துக்கு வைத்திருந்தனா்.