லால்குடி: திருச்சி மாவட்டம், லால்குடி அருகே சனிக்கிழமை ரயிலில் அடிபட்டு பெண் உயிரிழந்தாா்.
லால்குடி அருகே மேலவாளாடி பகுதியைச் சோ்ந்தவா் சுயம்பு மனைவி நீலாவதி (55). புதுக்குடி பகுதியில் வசிக்கும் மகள் வீட்டுக்குச் செல்ல தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது லால்குடியிலிருந்து திருச்சி நோக்கிச் சென்ற ரயில் எஞ்சின் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
அரியலூா் ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிந்து, சடலத்தைக் கைப்பற்றி ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனா்.