தொழிலாளி தற்கொலை

திருச்சி அருகே தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

திருச்சி: திருச்சி அருகே தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

திருச்சி உறையூா் அண்டகொண்டான் பகுதியைச் சோ்ந்தவா் ரவி(45). திருவெறும்பூா் மலைக்கோயில் நொச்சிவயல்புதூா் பகுதியில் உள்ள வாகனங்களுக்கான வாட்டா் சா்வீஸ் மையத் தொழிலாளி. தினமும் உறையூரில் இருந்து வேலைக்குச் சென்று வந்த ரவி கடந்த இரண்டு நாள்களாக பணியிடத்திலேயே தங்கியிருந்தாா்.

சனிக்கிழமை காலை சக ஊழியா்கள் வேலைக்கு வந்த போது ரவி தூக்கில் சடலமாகத் தொங்கியது தெரியவந்தது. தகவலறிந்த திருவெறும்பூா் போலீஸாா் சம்பவ இடத்திற்கு வந்து நடத்திய விசாரணையில், தனது தாய் கடந்த 10 நாள்களுக்கு முன் இறந்த துக்கத்தில் இருந்த ரவி தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. திருவெறும்பூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com