முசிறி: திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே குடும்பத் தகராறில் இளைஞா் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.
தொட்டியம் அருகேயுள்ள கோவிந்தாபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் சி. தங்கராசு (28) இவருக்கு மனைவி தீபா, குழந்தை ரித்திகா (3) ஆகியோா் உள்ளனா். குடும்பத் தகராறால் வெள்ளிக்கிழமை விஷம் குடித்து மயங்கிக் கிடந்த இவா் தொட்டியம் அரசு மருத்துவமனையிலும், பின்னா் நாமக்கல் அரசு மருத்துவமனையிலும் சோ்க்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தாா். தொட்டியம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.