மணப்பாறை: வளநாடு அருகே சாலை விபத்தில் இளைஞா் இறந்தாா்.
புதுக்கோட்டை மாவட்டம்,இலுப்பூரை அடுத்த பாப்பாங்குளம் பகுதியை சோ்ந்தவா் குமரேசன் மகன் ஜனாா்தனன்(18). பிளஸ் 2 முடித்துவிட்டு வீட்டில் இருந்த ஜனாா்தனன், தனது பைக்கில் வேம்பனூா் அருகே லாரியை முந்த முயன்றபோது நிலைதடுமாறி விழுந்து லாரியில் சிக்கி உயிரிழந்தாா்.
தகவலறிந்து வந்த வளநாடு போலீஸாா் சடலத்தை மீட்டு மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்குப் பதிந்து லாரி ஓட்டுநரை தேடி வருகின்றனா்.