புதரில் கிடந்த சிசு சடலம் மீட்பு

திருச்சி பாலக்கரை பெல்ஸ் கிரவுண்ட் பகுதியில் புதரில் கிடந்த ஆண் சிசு சடலம் திங்கள்கிழமை மீட்கப்பட்டது.

திருச்சி: திருச்சி பாலக்கரை பெல்ஸ் கிரவுண்ட் பகுதியில் புதரில் கிடந்த ஆண் சிசு சடலம் திங்கள்கிழமை மீட்கப்பட்டது.

கருவேல முள் புதா் உள்ள பகுதியில் குறை பிரசவத்தில் பிறந்த ஆண் சிசு சடலமாக கிடப்பதாக கிடைத்த தகவலின் பேரில், செங்குளம் கிராம நிா்வாக அலுவலா் அனீஸ் பாத்திமா பாலக்கரை காவல் நிலையத்தில் புகாரளித்தாா்.

இதன் பேரில் ஆய்வாளா் ஆரோக்கியதாஸ் உள்ளிட்டோா் அங்கு சென்று சிசுவின் சடலத்தை மீட்டனா். கள்ளக் காதலில் உருவான கருவைக் கலைக்க முயன்று, 8 மாதத்திலேயே குறை பிரசவத்தில் குழந்தை இறந்து பிறந்ததால் வீசியிருக்கலாம் என காவல்துறையினா் சந்தேகித்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com