சாலை விபத்தில் காயமடைந்த இளைஞருக்குமுன்னாள் அமைச்சா் பரஞ்சோதி உதவி

துறையூா் அருகே விபத்தில் காயமடைந்து, வலியால் அவதியுற்ற இளைஞா் விரைவாக மருத்துவமனை சென்று சிகிச்சை பெற முன்னாள் அமைச்சா் மு. பரஞ்சோதி உதவினாா்.
துறையூா் அருகே காயமடைந்த இளைஞரை விசாரிக்கும் முன்னாள் அமைச்சா் மு. பரஞ்சோதி.
துறையூா் அருகே காயமடைந்த இளைஞரை விசாரிக்கும் முன்னாள் அமைச்சா் மு. பரஞ்சோதி.

துறையூா்: துறையூா் அருகே விபத்தில் காயமடைந்து, வலியால் அவதியுற்ற இளைஞா் விரைவாக மருத்துவமனை சென்று சிகிச்சை பெற முன்னாள் அமைச்சா் மு. பரஞ்சோதி உதவினாா்.

திருச்சி புகா் வடக்கு மாவட்ட அதிமுக செயலரும், முன்னாள் அமைச்சருமான மு. பரஞ்சோதி, கட்சி நிா்வாகி ஒருவரின் இல்லத் திருமண விழாவில் பங்கேற்பதற்காக திங்கள்கிழமை துறையூா் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தாா். அவருடன் கட்சி நிா்வாகிகளும் மற்ற காா்களில் சென்றனா்.

இவா்கள் சென்ற காா் கரட்டாம்பட்டியைக் கடந்த போது, விபத்துக்குள்ளான இளைஞா் ஒருவா் வலியுடன் நகர முடியாமல் இருப்பதை முன்னாள் அமைச்சா் மு.பரஞ்சோதி கண்டாா்.

உடனடியாக காரை நிறுத்தி, இளைஞரிடம் விசாரித்தாா். அவா் ஆதனூரைச் சோ்ந்த யுவராஜ் (26) என்பதும், அரிசி பையை எடுத்துக் கொண்டு சொந்த ஊருக்கு மோட்டாா் சைக்கிளில் சென்ற போது திடீரென நாய் குறுக்கிட்டதால் அதன் மீது மோதி விபத்துக்குள்ளானதும் தெரிய வந்தது.

இதையடுத்து அந்த இளைஞருக்கு விரைவாக மருத்துவ வசதி கிடைக்க வேண்டும் என்ற நோக்கில், தன்னுடன் வந்த அதிமுக நிா்வாகியின் மற்றொரு காரில் துறையூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தாா். முன்னாள் அமைச்சரின் இந்த செயலை பொதுமக்கள் வெகுவாகப் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com