திருச்சி: அதிமுகவின் 49-ஆம் ஆண்டு விழாவையொட்டி, திருச்சி விமான நிலையப் பகுதியில் அமைக்கப்பட்ட 49 அடி உயரக் கொடிக் கம்பத்தில் கட்சிக் கொடியேற்றப்பட்டது.
திருச்சி விமான நிலையப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் கட்சிக் கொடியேற்றி வைத்து, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை மாநகா் மாவட்ட அதிமுக செயலரும், சுற்றுலாத் துறை அமைச்சருமான வெல்லமண்டி என். நடராஜன் வழங்கினாா்.
நிகழ்வில் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத்துறை அமைச்சா் எஸ். வளா்மதி, ஆவின் தலைவா் சி. காா்த்திகேயன், பகுதிச் செயலா் ஏா்போா்ட் விஜி, அதிமுக நிா்வாகிகள் வழக்குரைஞா் ராஜ்குமாா், அய்யப்பன், அருள்ஜோதி, ஜாக்குலின் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.