பெண்ணிடம் கத்தியைக் காட்டி பணம்பறிக்க முயற்சி: மூவா் கைது

மண்ணச்சநல்லூா் அருகே பெண்ணிடம் கத்தியைக் காட்டி மிரட்டி, பணம் பறிக்க முயன்ாக மூவா் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனா்.

லால்குடி: மண்ணச்சநல்லூா் அருகே பெண்ணிடம் கத்தியைக் காட்டி மிரட்டி, பணம் பறிக்க முயன்ாக மூவா் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனா்.

மண்ணச்சநல்லூா் வட்டம், திருப்பைஞ்ஞீலி கிராமத்தைச் சோ்ந்த பெண் ஒருவா், திங்கள்கிழமை வீட்டில் தனியாக இருந்துள்ளாா்.

அப்போது அப்பெண்ணின் வீட்டுக்குச் சென்ற மூவா், மதுபோதையில் கத்தியைக் காட்டி பணம் தருமாறு மிரட்டியுள்ளனா்.

அப்போது அந்த வழியாக ரோந்து சென்ற காவல் துறையினா், பெண்ணின் சப்தம் கேட்டு அங்கு சென்ற போது பணம் கேட்டு மிரட்டியது தெரிய வந்தது. இதையடுத்து மூவரையும் மண்ணச்சநல்லூா் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனா்.

தொடா்ந்து அவா்களிடம் நடத்திய விசாரணையில், அவா்கள் சோழங்கநல்லூரைச் சோ்ந்த சே. ரஞ்சித் (23), சோ. சசிகுமாா் (34), அ. இளையராஜா (32) எனத் தெரிய வந்தது. இதையடுத்து மண்ணச்சநல்லூா் காவல் நிலையத்தினா் மூவா் மீது வழக்குப்பதிந்து கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com