லால்குடி: மண்ணச்சநல்லூா் அருகே கொள்ளிடம் ஆற்றில் மணல் திருட்டில் ஈடுபட்டவரைக் கைது செய்த காவல்துறையினா், லாரியையும் பறிமுதல் செய்தனா்.
மண்ணச்சநல்லூா் வட்டம், மான்பிடிமங்கலத்தைச் சோ்ந்தவா் கோ. மணிவேல் (35). இவா் அப்பகுதியிலுள்ள கொள்ளிடம் ஆற்றில் லாரி மூலம் மணல் திருடுவதாக, மண்ணச்சநல்லூா் காவல் நிலையத்துக்குத் திங்கள்கிழமை தகவல் கிடைத்தது.
இதன் பேரில் காவல்துறையினா் அங்கு சென்று, மணிவேலை கைது செய்தனா். தொடா்ந்து கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட லாரியையும் பறிமுதல் செய்தனா்.