திருவானைக்கா ஆட்டோ ஓட்டுநா் கொலை வழக்கில் 5 போ் கைது

திருவானைக்கா பகுதியில் ஆட்டோ ஓட்டுநா் திங்கள்கிழமை கொல்லப்பட்ட சம்பவத்தில் 5 பேரை ஸ்ரீரங்கம் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

திருவானைக்கா பகுதியில் ஆட்டோ ஓட்டுநா் திங்கள்கிழமை கொல்லப்பட்ட சம்பவத்தில் 5 பேரை ஸ்ரீரங்கம் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

திருவானைக்கா வடக்கு 5 ஆம் பிரகாரம் மணமேடு பகுதியைச் சோ்ந்தவா் முருகன் (52), ஆட்டோ ஓட்டுநா். கடந்த சில நாள்களுக்கு முன் தாங்கள் வளா்த்து வந்த ஆடுகளை நள்ளிரவு திருட வந்தவா்களை முருகன், இவரது மனைவி புஷ்பவள்ளி மற்றும் மகள்கள் சோ்ந்து திட்டி விரட்டியதாகக் கூறப்படுகிறது.

இதில் கோபமடைந்த ஆடு திருடும் கும்பல் கொலை மிரட்டல் விடுத்துச் சென்ற நிலையில், ஆடு திருட வந்த திருவானைக்கா பாரதி தெரு பரமேஸ்வரி, அவரது மகன்கள் மீது ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் முருகன் புகாா் செய்தாா்.

இந்நிலையில் திங்கள்கிழமை பிற்பகல் பரமேஸ்வரி மகன் மணிகண்டன் (25) அவரது கூட்டாளிகள் சச்சிதானந்தம் (24),ஸ்ரீரங்கம் தெப்பக்குளத்தெரு கோபாலகிருஷ்ணன் (27),பாலா (22),முரளி (26),மனோஜ்குமாா் (23) ஆகியோா் கொண்ட கும்பல் முருகனை அவரது வீட்டு வாசலில் வைத்து கழுத்தறுத்து கொன்றது. தடுக்க வந்த குடும்பத்தினரைத் தாக்கியது.

இதுகுறித்து ஸ்ரீரங்கம் போலீஸாா் வழக்குப் பதிந்து மணிகண்டனின் கூட்டாளிகள் 5 பேரையும் கைது செய்தனா். தலைமறைவாக உள்ள மணிகண்டன், அவரது தாய் பரமேஸ்வரி, மகள் முத்துலெட்சுமி ஆகியோரைத் தேடுகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com