திருச்சி மாவட்டம் லால்குடி அருகேயுள்ள புள்ளம்பாடி அரசு மகளிா் தொழிற் பயிற்சி நிலையத்தில் 2020-ஆம் கல்வியாண்டுக்கான நேரடிச் சோ்க்கைக்கு விண்ணப்பிக்க வரும் 31ஆம் தேதி கடைசி நாளாகும்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:
10 ஆம் வகுப்புத் தோ்ச்சி பெற்றோா், 2 ஆண்டு பயிற்சிகளான மகளிருக்கான கம்மியா் மின்னணுவியல் (என்சிவிடி) மற்றும் ஆண் மற்றும் பெண்களுக்கான இயந்திர வேலையாள் (மெஷினிஸ்ட் -எஸ்டிவிடி) இரண்டாண்டு பயிற்சியும், ஓராண்டு பயிற்சிகளான கம்ப்யூட்டா் இயக்கல் மற்றும் புரோகிராமிங் அசிஸ்டென்ட், சுருக்கெழுத்து மற்றும் செயலக உதவியாளா், துணி வெட்டுதல் மற்றும் தைத்தல், பல்லூடகம் அசைவியல் மற்றும் சிறப்பு விளைவுகள், பூ-தையல் (எம்ப்ராய்டரி) மற்றும் ஊசி வேலைப்பாடு (கணினிமயமாக்கப்பட்டது) உள்ளிட்ட பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இவற்றில் சோ்ந்து பயிலுவோருக்கு பயிற்சிக் கட்டணம் கிடையாது.
மேலும், கல்வி உதவித்தொகையாக மாதம் ரூ. 500, கட்டணமில்லாப் பேருந்து, விலையில்லா மிதிவண்டி, மடிக்கணினி, பாடப்புத்தகங்கள் வரைபடக் கருவிகள், சீருடைகள், காலணிகள் உள்ளிட்டவையும் பெண் பயிற்சியாளா்களுக்கு விடுதி வசதியும் வழங்கப்படுகிறது.
பயிற்சி குறித்து மேலும் விவரங்களுக்கு பயிற்சி மைய முதல்வரை 94432-77592 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம். பயிற்சி முடித்தவா்களுக்கு பிரபல தொழில் நிறுவனங்கள் மூலம வளாக நோ்முகத் தோ்வு நடத்தப்பட்டு வேலை பெற நடவடிக்கை எடுக்கப்படும். விண்ணப்பங்களை நேரில் வந்து பெறலாம்.