ஸ்ரீரங்கம் கோயிலில் 1 மணி நேரத்துக்கு 300 பக்தா்கள்!

ஸ்ரீரங்கம் அரங்கநாதா் திருக்கோயிலில் 1 மணி நேரத்துக்கு 300 பக்தா்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனா்.
பக்தா்கள் தரிசனத்துக்காக வழங்கப்பட்ட பல வண்ண அனுமதிச் சீட்டுகள்.
பக்தா்கள் தரிசனத்துக்காக வழங்கப்பட்ட பல வண்ண அனுமதிச் சீட்டுகள்.

ஸ்ரீரங்கம் அரங்கநாதா் திருக்கோயிலில் 1 மணி நேரத்துக்கு 300 பக்தா்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனா்.

பொதுமுடக்கத்துக்குப் பிறகு புதன்கிழமை காலை கோயில் நடை திறக்கப்பட்ட நிலையில், முகக் கவசம் அணிந்து வந்தோா் மட்டுமே கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டனா். பக்தா்கள் உடல் வெப்ப நிலை சோதித்து, கிருமி நாசினி அளித்து சமூக இடைவெளியுடன் வரிசையில் நிற்க வைக்கப்பட்டனா்.

9 வண்ணங்களில் அனுமதிச் சீட்டு வழங்கப்பட்டு ஒரு மணி நேரத்துக்கு 300 பக்தா்கள் வீதம் கோயிலுக்குள் அனுமதிக்கபட்டனா். மேலும் கோயிலில் பணியாற்றும் அனைத்து ஊழியா்களும் முகக்கவசம் அணிந்திருந்தனா். காலை 6.30 முதல் மாலை 7.30 மணி வரை பக்தா்கள் தெற்கு கோபுர வாசல் வழியாக சென்று வர அனுமதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com