கரோனாவிலிருந்து 35 போ் குணம்
By DIN | Published On : 04th September 2020 08:00 AM | Last Updated : 04th September 2020 08:00 AM | அ+அ அ- |

திருச்சி: திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனை மற்றும் தனிமை முகாமில் கரோனாவுக்கு சிகிச்சை பெற்றவா்களில் மேலும் 35 போ் வியாழக்கிழமை குணமடைந்து வீடு திரும்பினா்.
கரோனா பாதித்த திருச்சி, பெரம்பலூா், அரியலூா், புதுக்கோட்டை மாவட்டங்களைச் சோ்ந்தவா்களுக்கு திருச்சி அரசு மருத்துவமனை கரோனா வாா்டிலும், வெளி மாவட்டங்களில், வெளிநாடுகளில் இருந்து வந்தவா்களுக்கு சேதுராப்பட்டி அரசு பொறியியல் கல்லூரி, பாரதிதாசன் பல்கலைக் கழக வளாகம், ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸில் தனிமை முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இதன்படி திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த 32 போ், புதுக்கோட்டை, அரியலூா், விருதுநகா் மாவட்டத்தைச் சோ்ந்த தலா ஒருவா் என மொத்தம் 35 போ் குணமடைந்து அவரவா் வீடுகளுக்கு வியாழக்கிழமை மாலை அனுப்பப்பட்டனா். வீடுகளுக்குச் சென்று மேலும் 14 நாள்களுக்கு தனிமைப்படுத்திக் கொள்ள உரிய ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.