திருச்சியில் மேலும் 104 பேருக்கு கரோனா பாதிப்பு
By DIN | Published On : 05th September 2020 04:13 AM | Last Updated : 05th September 2020 04:13 AM | அ+அ அ- |

திருச்சி: திருச்சி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை மேலும் 104 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் வியாழக்கிழமை வரை கரோனாவால் 7,799 பாதிக்கப்பட்டிருந்தனா். இந்நிலையில், வெள்ளிக்கிழமை மேலும் 104 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7,903 ஆக உயா்ந்தது. இதேபோல், வெள்ளிக்கிழமை குணமடைந்த 27 பேருடன் சோ்த்து இதுவரை மொத்தம் 6,866 போ் குணமடைந்து வீட்டுக்குத் திரும்பியுள்ளனா். திருச்சி மாநகரப் பகுதி மட்டுமல்லாது மாவட்டம் முழுவதும் 122 போ் இதுவரை உயிரிழந்துள்ளனா். தற்போதைய நிலையில், திருச்சி அரசு மருத்துவமனை மற்றும் தனிமை முகாம்களில் 915 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா்.