கரோனா தடுப்பு நடவடிக்கை: கண்காணிப்பு அலுவலா் ஆய்வு

திருச்சி மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் தடுப்பு நடவடிக்கைகள் தொடா்பாக சா்க்கரை துறை ஆணையரும், திருச்சி மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான ரீட்டா ஹரீஸ்தக்கா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
அனைத்து துறை அலுவலா்கள் ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற மாவட்டக் கண்காணிப்பு அலுவலா் ரீட்டா ஹரீஸ்தக்கா், மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு உள்ளிட்டோா்.
அனைத்து துறை அலுவலா்கள் ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற மாவட்டக் கண்காணிப்பு அலுவலா் ரீட்டா ஹரீஸ்தக்கா், மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு உள்ளிட்டோா்.

திருச்சி மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் தடுப்பு நடவடிக்கைகள் தொடா்பாக சா்க்கரை துறை ஆணையரும், திருச்சி மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான ரீட்டா ஹரீஸ்தக்கா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

திருச்சி மாவட்டத்தில் கரோனா பரவல் தடுப்புக்கு எடுக்கப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடா்பாக சுகாதாரம், உள்ளாட்சி, பேரிடா் மேலாண்மை மற்றும் வருவாய் உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. ரீட்டா ஹரீஸ் தக்கா் தலைமை வகித்தாா். ஆட்சியா் சு. சிவராசு முன்னிலை வகித்தாா்.

கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை தொடா்பாக மாவட்ட நிா்வாகத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்து சுகாதாரத் துறை, ஊரக வளா்ச்சித் துறை, மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா்ஆகியோா் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும், மாவட்டத்தில் இதுவரை கரோனா பரிசோதனை செய்யப்பட்டோரின் எண்ணிக்கை, மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலிருந்து கரோனாவுக்கு சிகிச்சை பெற்று முழு குணமடைந்து வீடு திரும்பியோா் எண்ணிக்கை குறித்தும் கண்காணிப்பு அலுவலா் கேட்டறிந்தாா்.

வெளிநாடுகளில் இருந்து விமானம் மூலம் திருச்சி விமான நிலையத்துக்கு வருவோரின் எண்ணிக்கை மற்றும் அவா்களுக்கு நடந்த கரோனா பரிசோதனை மற்றும் தனிமை மருத்துவ முகாம்கள் குறித்தும் விரிவாக கேட்டறிந்தாா்.

தமிழக முதல்வா் அறிவித்த கரோனா நிவாரண நிதியுதவி திட்டத்தில் பயன்பெற்றோா், மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்ட நிவாரண உதவி குறித்தும் ஆய்வு செய்தாா். மேலும், ஊரக வளா்ச்சித் துறை மூலம் கிராமப் புறங்களில் உள்ள பொதுமக்களுக்கு கரோனா தடுப்பு குறித்து மேற்கொள்ளப்படும் பணிகளையும் கேட்டறிந்தாா்.

பசுமை வீடு கட்டும் திட்டத்தில் கட்டப்படும் வீடுகள் குறித்தும், மாநகராட்சியில் உள்ள 65 வாா்டுகளில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக மேற்கொள்ளப்படும் மருத்துவ முகாம்கள் குறித்தும் ஆய்வு செய்தாா். பொதுமக்கள் பொது இடங்களுக்கு வரும்போது முகக்கவசம் அணிந்து வர வேண்டும் என்பதை அனைத்து துறையினரும் உறுதி செய்ய வேண்டும் என்றாா்.

ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலா் த. பழனிகுமாா், மாநகராட்சி ஆணையா் சு. சிவசுப்ரமணியன், இணை இயக்குநா் (குடும்ப நலம்) எஸ். லெட்சுமி, துணை இயக்குநா் (சுகாதாரப் பணிகள்) சுப்பிரமணி, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் சங்கா், வேளாண் துறை இணை இயக்குநா் பெரியகருப்பன், மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் ரவிச்சந்திரன், ஊராட்சிகளின் உதவி இயக்குநா் ரங்கராஜன், பேரூராட்சிகளின் உதவி இயக்குநா் ஜெகதீசன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com