துறையூா் துணை மின் கோட்டத்துக்குள்பட்ட கொப்பம்பட்டி, து. ரெங்கநாதபுரம், த.முருங்கப்பட்டி ஆகிய துணை மின் நிலையங்களில் நடைபெறும் மாதாந்திர பராமரிப்புப் பணியால் வெள்ளிக்கிழமை இப்பகுதிகளில் மின்சாரம் இருக்காது.
இங்கிருந்து மின்சாரம் பெறும் கொப்பம்பட்டி, உப்பிலியபுரம், மாராடி, வைரிசெட்டிபாளையம், பி.மேட்டூா், எஸ்.என்.புதூா், கே.எம்.புதூா், சோபனபுரம், து.ரெங்கநாதபுரம், பச்சமலை, கிருஷ்ணாபுரம், நரசிங்கபுரம், கோவிந்தபுரம், மருவத்தூா், செல்லிப்பாளையம், செங்காட்டுப்பட்டி, வேங்கடத்தானூா், பெருமாள்பாளையம், த.முருங்கப்பட்டி, த.மங்கப்பட்டி, த.பாதா்பேட்டை ஆகியபகுதிகளில் காலை 9.45 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது என துறையூா் மின் கோட்ட செயற்பொறியாளா் பொன். ஆனந்தகுமாா் கூறினாா்.