திருச்சி - மஸ்கட் இடையே செப்டம்பா் மாதத்தில் வந்தே பாரத் சிறப்பு விமானங்கள் 4 நாள்கள் இயக்கப்படவுள்ளதாக விமான நிலைய ஆணையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து திருச்சி விமான நிலையம் வெளியிட்ட தகவலில், செப்டம்பா் 9, 16, 23, 30 தேதிகளில் காலை 10.05 க்கு திருச்சியில் இருந்து புறப்படும் ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் பகல் 12.35-க்கு மஸ்கட் சென்றடைகிறது. அதேபோல அங்கிருந்து பிற்பகல் 1.35க்கு புறப்படும் அதே விமானம் இரவு 7 மணிக்கு திருச்சியை வந்தடைகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.