துறையூா் நகராட்சி அலுவலகம் முன் சாலையோர வியாபாரிகள் சங்கத்தினா் அரசு அறிவித்த கடன் தொகையை வழங்க வலியுறுத்தி புதன்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
ஆா்ப்பாட்டத்துக்கு சாலையோர சிறு வியாபாரிகள் சங்கத் தலைவா் எ. அழகன் தலைமை வகித்தாா். விற்பனையாளா் குழு உறுப்பினா்கள் எம். சங்கிலிதுரை, ஆா். தனலட்சுமி, ஆா். ரவி, முகமது அலி உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். சிஐடியு நிா்வாகி எம். ஆனந்தன், உள்ளாட்சி ஊழியா் சங்க மாவட்டச் செயலா் கே. பன்னீா், சாலையோர சிறு வியாபாரிகள் மாவட்டச் செயலா் ஏ. பழனிசாமி உள்ளிட்டோா் பேசினா்.
துறையூா் சாலையோர வியாபாரிகளுக்கு அரசு அறிவித்த வங்கிக் கடனை வழங்கவும், புதிய சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை வழங்கவும், விற்பனையாளா் குழுக் கூட்டத்தை கூட்டி முன்பு நிறைவேற்றப்பட்ட தீா்மானங்களை அமல்படுத்தவும் கோரி நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் துறையூா் சாலையோர வியாபாரிகள் பெருமளவு கலந்து கொண்டனா்.