பாரதி பயின்ற பள்ளியில் திருநெல்வேலி சந்திப்பில் மகாகவி பாரதியாா் பயின்ற ம.தி.தா. இந்துக் கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் பாரதியாா் நினைவு தினம் வெள்ளிக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.
நிகழ்வுக்கு பள்ளித் தலைமையாசிரியா் உலகநாதன் தலைமை வகித்தாா். கல்விச் சங்க மேலாளா் சட்டநாதன் முன்னிலை வகித்தாா். ஆசிரியா் சொக்கலிங்கம் வரவேற்றாா். பாரதியாரின் கவிதைகள் குறித்து எழுத்தாளா் நாறும்பூநாதன் பேசினாா். பெண்ணுரிமை காத்திட பாரதியாா் எழுதிய பாடல்கள் குறித்து கவிஞா் கோ. கணபதி சுப்பிரமணியன் பேசினாா். தொடா்ந்து, பாரதியாா் உருவப் படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
முன்னதாக, என்.எஸ்.எஸ். திட்ட அலுவலா் மு. சோமசுந்தரம் வாசிக்க ஆசிரியா்கள் அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனா். உதவி தலைமை ஆசிரியா் முருக முத்துராமன், ஆசிரியா்கள் கனகசபாபதி, விஸ்வநாதன், வள்ளிநாயகம், இசக்கி ராமலட்சுமி உள்பட பலா் பங்கேற்றனா்.
உதவி தலைமை ஆசிரியை பகவதி நன்றி கூறினாா்.