லால்குடி, செப்.11: திருச்சி மாவட்டம், கல்லக்குடியில் 7 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி முதல்வருக்கு அஞ்சல் அனுப்பும் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
அரசு பணியாளா்கள் சங்கம் சாா்பாக கல்லக்குடி பேரூராட்சி கிளைத் தலைவா் பொ. குமாா் தலைமையில், தமிழ்நாடு அரசு பணியாளா் சங்க மாநில பொருளாளா் ச. சாகுல்அமீது முன்னிலையில் இந்தப் போராட்டம் நடைபெற்றது. கல்லக்குடி த. செந்தமிழ்ச்செல்வன், கை. செல்வமணி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.