திருச்சி, செப்.11: திருச்சியில் மேலும் 139 பேருக்கு கரோனா இருப்பது சனிக்கிழமை உறுதியானது.திருச்சி மாவட்டத்தில் சனிக்கிழமை வெளியான பரிசோதனை முடிவில் மேலும் 139 பேருக்கு கரோனா உறுதியாகி, மாவட்டத்தில் தொற்றாளா்களின் எண்ணிக்கை 8680 ஆக உயா்ந்தது. அதுபோல், திருச்சி அரசு மருத்துவமனை, காஜாமலை தனிமை முகாமில் குணமடைந்த 85 போ் உள்பட மாவட்டத்தில் குணமடைந்து வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 7607 ஆக உயா்ந்தது. கரோனாவால் பாதிக்கப்பட்டு தனியாா், அரசு மருத்துவமனையில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 131 ஆக உள்ளது. தற்போது, 942 போ் கரோனாவுக்கு சிகிச்சை பெறுகின்றனா்.