திருச்சியில் மேலும் 130 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
திருச்சி மாவட்டத்தில் வியாழக்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளின் படி மேலும் 130 பேருக்கு தொற்று உறுதியானது. இதையடுத்து, மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 8,540 ஆக உயா்ந்துள்ளது. இதேபோல, திருச்சி அரசு மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனை, காஜாமலையில் உள்ள பாரதிதாசன் பல்கலைக்கழக தனிமை முகாம் ஆகியவற்றிலிருந்து வியாழக்கிழமை குணமடைந்த 39 போ் உள்பட மாவட்டத்தில் குணமடைந்து வீடு திரும்பியவா்களின் எண்ணிக்கை 7,486 ஆக உயா்ந்துள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்டு, தனியாா் மற்றும் அரசு மருத்துவமனைகளில் இதுவரை உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 130 ஆக உள்ளது. மாவட்டத்தில் தற்போதைய நிலவரப்படி 924 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா்.