திருவெறும்பூா் சட்டப்பேரவைத் தொகுதி முன்னாள் எம்எல்ஏவுக்கு கரோனா தொற்று ஏற்பட்டதாக தகவல் வெளியாகி வருகிறது.
திருச்சி மாவட்டம் திருவெறும்பூா் சட்டப்பேரவைத் தொகுதியிலும் கரோனாவால் பலா் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அத்தொகுதி முன்னாள் எம்எல்ஏ கே.என். சேகரனும் கரோனா பாதிப்பால் திருச்சி தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதாக தகவல் பரவி வருகிறது. இது திமுகவினரிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.