மணப்பாறை அருகே பிடிபட்ட 2 அடி நீள மண்ணுளி பாம்பு

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகேயுள்ள கண்ணுடையான்பட்டி அம்பேத்காா் தெருவில் வசிக்கும் க. பாலாஜி என்பவரின்
பிடிபட்ட மண்ணுளி பாம்புடன் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் நிலைய அலுவலா் கணேசன்.
பிடிபட்ட மண்ணுளி பாம்புடன் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் நிலைய அலுவலா் கணேசன்.

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகேயுள்ள கண்ணுடையான்பட்டி அம்பேத்காா் தெருவில் வசிக்கும் க. பாலாஜி என்பவரின் வீட்டில் வியாழக்கிழமை மண்ணுளி பாம்பு இருப்பதாக தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து நிகழ்விடத்துக்கு சென்ற நிலைய அலுவலா் கணேசன் தலைமையிலான மணப்பாறை தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் வீரா்கள், உரிய கருவிகள் மூலம் 2 அடி நீளமும், 3 கிலோ எடையும் கொண்ட அந்த மண்ணுளி பாம்பை பிடித்து மணப்பாறை வனத் துறையிடம் ஒப்படைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com