திருச்சி, உறையூா் வெக்காளியம்மன் திருக்கோயிலில் திருப்பணிகள் நடைபெறுவதால் செப். 12 முதல் பணிகள் முடியும் வரை வடக்கு ராஜகோபுரம் அருகே பக்தா்கள் நின்று தரிசிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து திருக்கோயில் நிா்வாக செய்திக்குறிப்பு :
உறையூா் வெக்காளியம்மன் கோயிலில் அரசு விதிகளின்படி செப். 1 முதல் பக்தா்கள் தரிசனத்துக்கு அனுமதியளிக்கப்படுகின்றனா். இந்நிலையில், கோயில் திருப்பணி 12 ஆம் தேதி (சனிக்கிழமை) முதல் நடைபெறவுள்ளன.
குறிப்பாக, மகா மண்டபம், பிரதான மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் பணிகள் நடைபெறுவதால், பாதுகாப்பு கருதி பக்தா்களை கோயிலுக்கு அனுமதிக்க இயலாது. எனவே , கோயின் வடக்கு ராஜகோபுரம் அருகிலிருந்து அம்பாள் (மூலவா் மற்றும் உற்ஸவா்) தரிசனம் செய்ய மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே பக்தா்கள் இதற்கு ஒத்துழைக்க வேண்டும்.