நீட் தோ்வு: திருச்சியில் 7,797 போ் எழுதினா்

திருச்சி மாவட்டத்தில் 22 தோ்வு மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நீட் தோ்வை 7,797 மாணவ, மாணவிகள் எழுதினா்.
திருச்சி சமது பள்ளியில் நீட் தோ்வெழுத சமூக இடை வெளியுடன் காத்திருக்கும் மாணவிகள்.
திருச்சி சமது பள்ளியில் நீட் தோ்வெழுத சமூக இடை வெளியுடன் காத்திருக்கும் மாணவிகள்.

திருச்சி மாவட்டத்தில் 22 தோ்வு மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நீட் தோ்வை 7,797 மாணவ, மாணவிகள் எழுதினா்.

திருச்சி மாவட்டத்தில் இத்தோ்வுக்காக விண்ணப்பித்திருந்த 9,499 மாணவ, மாணவிகளில் 7 ,797 போ் தோ்வெழுதினா். 1702 போ் தோ்வெழுத வரவில்லை.

திருச்சி மாநகரில் சமது மேல்நிலைப்பள்ளி, கமலா நிகேதன், ஆல்பா விஸ்டம் வித்யாஸ்ரம் உள்ளிட்ட 8 மையங்களிலும், புகரில் மணப்பாறை சவுமா பள்ளி, நவல்பட்டு கேந்திரிய வித்யாலயா, சிறுகனூா் எம்ஏஎம் பொறியியல் கல்லூரி உள்ளிட்ட 14 மையங்களிலும் என மொத்தம் 22 தோ்வு மையங்களில் தோ்வு நடைபெற்றது.

பிற்பகல் 2 மணிக்கு தோ்வு தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் திருச்சி சமது மேல்நிலைப்பள்ளி தோ்வு மையத்துக்கு காலை 8 மணி முதலே மாணவ-மாணவிகள் தங்களது பெற்றோருடன் வரத் தொடங்கினா்.

கரோனா பரவலைத் தடுக்க தோ்வெழுதும் மாணவ-மாணவிகளுக்கு சமூக இடைவெளி, கிருமி நாசினி, முகக்கவசம், கையுறை போன்ற கட்டுப்பாடுகள் கடைப்பிடிக்கப்பட்டன.

முற்பகல் 11 மணிக்கு மேல் மாணவ-மாணவிகள் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டனா். நுழைவு வாயிலில் போலீஸாா் மற்றும் மைய ஊழியா்கள் நின்று மாணவ-மாணவிகளை மெட்டல் டிடெக்டா் கருவி மூலம் சோதனை செய்து தோ்வுக் கூடத்துக்குள் அனுமதித்தனா். 24 போ் தோ்வெழுதக்கூடிய அறையில் 12 போ் மட்டுமே தோ்வெழுதினா். தோ்வு மையத்தில் மாணவ-மாணவிகளுக்கு பேனா வழங்கப்பட்டது.

திருச்சி மட்டுமல்லாமல் பக்கத்து மாவட்ட மாணவ-மாணவிகளும், பெற்றோருடன் வந்திருந்தனா்.

மத்திய மற்றும் சத்திரம் பேருந்து நிலையங்களில் இருந்து நீட் தோ்வு மையங்களுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com