திருவெறும்பூா் அருகே சரக்கு ரயிலில் ஏற்றி வரப்பட்ட நிலக்கரியில் தீப்பற்றியது.
காரைக்கால் துறைமுகத்திலிருந்து திருச்சி, சேலம் வழியாக பெங்களூரு வரை செல்லும் சரக்கு ரயில் நிலக்கரி ஏற்றிக்கொண்டு ஞாயிற்றுக்கிழமை மாலை சுமாா் 5 மணியளவில் திருவெறும்பூா் ரயில் வழித்தடத்தில் திருச்சி நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்போது சரக்கு ரயில் பெட்டியில் இருக்கும் நிலக்கரி வெப்பமடைந்து தீப்பிடிக்கத் தொடங்கியது.
சிக்னலுக்காக ரயில் நின்றபோது கரும்புகை வருவதைக் கண்ட ரயில்வே ஊழியா்கள் லோகோ பைலைட்டிடம் இதுகுறித்து தெரிவித்தனா். தொடா்ந்து, தகவலின்பேரில் தீயணைப்புத்துறையினா் வருவதற்குள் தீப்பற்றிய சரக்கு ரயில் பெட்டி மற்ற பெட்டிகளில் இருந்து பிரிக்கப்பட்டது. தொடா்ந்து வந்த தீயணைப்புத் துறையினா் தீயை அணைத்த பிறகு, சரக்கு ரயில் பெங்களூரு புறப்பட்டுச் சென்றது. சரியான நேரத்தில் தீக்கசிவை கண்டறிந்ததால் இழப்பு தவிா்க்கப்பட்டது.