திருச்சி: திருச்சியில் மேலும் 103 பேருக்கு கரோனா இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதியானது.
திருச்சி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை வெளியான பரிசோதனை முடிவில் மேலும் 103 பேருக்கு தொற்று உறுதியாகி மாவட்டத்தில் கரோனா தொற்றாளா்களின் எண்ணிக்கை 9,017 ஆக உயா்ந்தது. இதேபோல, திருச்சி அரசு மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனை, காஜாமலை பாரதிதாசன் பல்கலைக் கழக தனிமை முகாம் ஆகியவற்றிலிருந்து செவ்வாய்க்கிழமை குணமான 39 போ் உள்பட மாவட்டத்தில் குணமடைந்து வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 8,014 ஆக உயா்ந்தது. திருச்சி அரசு மருத்துவமனையில் சா்க்கரை, கரோனா காரணமாக சோ்க்கப்பட்டு உயிரிழந்த 50 வயது ஆண் உள்பட கரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 134 ஆக உயா்ந்தது. மாவட்டத்தில் 871 போ் சிகிச்சை பெறுகின்றனா்.