திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த கரட்டுப்பட்டியில், இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் சாா்பாக நீட் தோ்வை ரத்து செய்ய வேண்டும், புதிய வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடந்தது.
திண்டுக்கல் - திருச்சி தேசிய நெடுஞ்சாலை பேருந்து நிறுத்தம் முன் வட்டத் தலைவா் ஆவா. இளையராஜா தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்து என். மனோகா் முன்னிலை வகித்தாா். புகா் மாவட்ட தலைவா் பி. பாலு சிறப்புரையாற்றினாா். திருப்பதி, வடிவேல், ராஜதுரை உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.