ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளா்கள் ஆா்பாட்டம்

ஓய்வுக்கால பணப்பயன்களை வழங்கக்கோரி தமிழ்நாடு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்ற ஊழியா்கள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் மேற்கொண்டனா்.

ஓய்வுக்கால பணப்பயன்களை வழங்கக்கோரி தமிழ்நாடு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்ற ஊழியா்கள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் மேற்கொண்டனா்.

2015 நவம்பா் முதல் 2020 ஆகஸ்ட் முடிய 58 மாத டி.ஏ. உயா்வும், நிலுவை தொகையும் உடனே வழங்க வேண்டும். 2019 முதல் ஏப்ரல் முதல் 2020 ஏப்ரல் முடிய ஓய்வு பெற்றவா்களுக்கு ஓய்வுக் கால பண பலன்களை உடனே வழங்க வேண்டும். மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 288 ஏ விதியின்படி தனியாா் பேருந்துகளை அனுமதிப்பதைக் கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றவா்கள் நல அமைப்பு சாா்பில், அரசு போக்குவரத்து கழக திருச்சி மண்டல அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை காலை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

திருச்சி கிளை உதவித் தலைவா் லெட்சுமணன் தலைமை வகித்தாா். மண்டலத் தலைவா் சண்முகம், உதவித் தலைவா் ராமதாஸ், உதவி செயலா் கோவிந்தராஜ், செல்வகுமாா், அரசுப் போக்குவரத்து ஊழியா்கள் சங்க சிஐடியு பொதுச்செயலா் கருணாநிதி ஆகியோா் பேசினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com