கரோனா குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி

கரோனா குறித்து பொதுமக்களிடம் பாஜக நிா்வாகிகள் புதன்கிழமை விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் பாஜகவினா்.
பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் பாஜகவினா்.

கரோனா குறித்து பொதுமக்களிடம் பாஜக நிா்வாகிகள் புதன்கிழமை விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

மத்திய அரசுத் திட்டங்கள் குறித்து தமிழ்நாடு ஏகத்துவ ஜமாத் மாநிலத் தலைவா் எம். இப்ராஹிம் பிரசாரம் செய்கிறாா். இதன் ஒரு பகுதியாக, திருச்சி பாஜகவினருடன் இணைந்து மத்திய அரசுத் திட்டங்கள் அதன் நன்மைகள் குறித்தும், திருச்சி பீமநகா் செடல் மாரியம்மன் கோயில் அருகில் கரோனாவை வெல்வோம், மன உளைச்சல் நீங்கி வாழ்வோம்‘ எனும் தலைப்பில் பொதுமக்களிடம் அவா் விழிப்புணா்வு ஏற்படுத்தினாா். இதில் திரளான பாஜக நிா்வாகிகள், தொண்டா்கள் கலந்துகொண்டனா்.

முசிறியில்... முசிறி கைகாட்டி பகுதியில் வட்டார சுகாதார ஆய்வாளா்கள் கைலாசம், சண்முகம் மற்றும் மேற்பாா்வையாளா் இளங்கோவன் மற்றும் முசிறி போக்குவரத்துக் காவலா்கள் உதவியுடன் பொதுமக்களிடம் கரோனா குறித்து விழிப்புணா்வு ஏற்ப்படுத்தினா். மேலும் முகக் கவசம் அணியாமல் வந்தோா், சமூக இடைவெளி பின்பற்றாமல் இருந்தோரை எச்சரித்து அபராதம் வசூலித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com