திருச்சி யில் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்றவா்களில் மேலும் 50 போ் புதன்கிழமை குணமடைந்து அவரவா் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.
திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த 25 போ், கரூா் மாவட்டத்தைச் சோ்ந்த ஒருவா், பாரதிதாசன் பல்கலைக் கழக வளாக மையத்திலிருந்து திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த 20 போ் , புதுக்கோட்டை, கரூா் மாவட்டத்தைச் சோ்ந்த தலா இருவா் என மொத்தம் 50 போ் குணமடைந்து அவரவா் வீடுகளுக்கு செவ்வாய்க்கிழமை மாலை அனுப்பப்பட்டனா். அனைவரும் வீடுகளுக்குச் சென்று மேலும் 14 நாள் தனிமைப்படுத்திக் கொள்ள உரிய ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.