திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த வையம்பட்டி அருகேயுள்ள இளங்காகுறிச்சியிலிருந்து அத்திகுளத்துப்பட்டி வழியாக குமாரவாடி வரை சுமாா் 3 கி.மீ.க்கு தாா்ச் சாலை அமைக்கும் பணி நடைபெறுகிறது.
இதில் சாலை தரமானதாக இல்லையெனக் கூறி புதன்கிழமை அத்திகுளத்துப்பட்டி பொதுமக்கள் சாலைப் பணியைத் தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனா். தகவலறிந்து சென்ற ஊா் முக்கியஸ்தா்கள், வையம்பாட்டி போலீஸாா், ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தி தரமான தாா்ச் சாலை அமைத்துத் தரப்படும் எனக் கூறியதையடுத்து அனைவரும் கலைந்துசென்றனா்.