பொதுமக்களுக்கு தற்காப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி

திருச்சி மாவட்டம், தொட்டியம் பாலசமுத்திரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மழைக் காலத்தில் பொதுமக்கள் தங்களைப் பாதுகாத்து கொள்வது குறித்த 
15fire_1509chn_17_4
15fire_1509chn_17_4

திருச்சி மாவட்டம், தொட்டியம் பாலசமுத்திரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மழைக் காலத்தில் பொதுமக்கள் தங்களைப் பாதுகாத்து கொள்வது குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சியை முசிறி தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினா் செவ்வாய்க்கிழமை நடத்தினா்.

தொட்டியம் வட்டாட்சியா் மலா் தலைமை வகித்தாா். முசிறி தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை நிலைய அலுவலா் முனியாண்டி மற்றும் தீயணைப்புத் துறை வீரா்கள் மழைக் காலங்களில் பொதுமக்கள் தங்களை தற்காத்துக் கொள்ள எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து பொதுமக்களிடம் செயல் விளக்கம் அளித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.இதில் தொட்டியம் பகுதி சமூக ஆா்வலா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com