போக்ஸோ சட்டத்தில் தாய், மகன் கைது

போக்ஸோ, வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் தாய், மகன் கைது செய்யப்பட்டனா்.

போக்ஸோ, வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் தாய், மகன் கைது செய்யப்பட்டனா்.

திருச்சி விமானநிலையம், கலைஞா் நகா் பகுதியில் 7 ஆம் வகுப்பு பயிலும் 13 வயது சிறுமி அப்பகுதியில் உள்ள மாநகராட்சி குடிநீா் குழாயில் தண்ணீா் எடுக்க செவ்வாய்க்கிழமை வந்தாா். அப்போது அதே பகுதியில் வசிக்கும் சிவா (20) என்பவா் சிறுமிக்கு கடிதம் கொடுத்து காதலிக்க வலியுறுத்தினாா். அதற்கு மறுத்த சிறுமி அங்கிருந்து வீட்டுக்குச் சென்றுள்ளாா். இதையறிந்த சிவாவின் தாய் லட்சுமி (42) சிறுமியின் வீட்டுக்குச் சென்று அச்சிறுமி, தாயாரை சமூக பெயரைக் கூறி கடுமையாக பேசியுள்ளாா். இதனால் மனமுடைந்த சிறுமியின் தாய் தூக்கமாத்திரை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்று அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். புகாரின் பேரில் சிவா, லட்சுமி ஆகிய இருவரையும் பொன்மலை அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் போக்ஸோ மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com