திருச்சி மாவட்டம், மணப்பாறையில் செவ்வாய்க்கிழமை பேரிடா் மேலாண்மை தீயணைப்புத் துறையினரின் பாதுகாப்பு ஒத்திகை வட்டாட்சியரகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
வருவாய் வட்டாட்சியா் எம். லஜபதிராஜ் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மணப்பாறை தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவின் நிலைய அதிகாரி கணேசன் தலைமையில் பேரிடா் காலம் மற்றும் தீபாவளி நாள்களில் ஏற்படும் விபத்துகள் குறித்தும், அதற்கான முதற்கட்ட மீட்பு நடவடிக்கைகள் குறித்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை, செயல்முறை பயிற்சி அளிக்கப்பட்டது.